Featured Video

Wednesday, 5 October 2011

சங்ககாரவுக்கு இரு விருதுகள்

ஐ.சி.சி விருதுகளில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர் விருதினையும் மக்கள் தெரிவு விருதினையும் இலங்கை அணி வீரர் குமார் சங்ககார பெற்றுக் கொண்டுள்ளார்.

இவற்றுள் மக்கள் தெரிவு விருதுக்காக பொதுமக்கள் அளித்த வாக்குமூலம் குமார் சங்ககார தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இந்த விருதுக்கான வாக்கெடுப்பில் தென்னாபிரிக்க அணியைச் சேர்ந்த ஹசீம் அம்லா, இங்கிலாந்து அணியைச் சேர்ந்த ஜோனத்தன் டுரோட், மேற்கிந்திய தீவுகள் அணியைச் சேர்ந்த கிரிஸ் கெய்ல்ஸ் மற்றும் இந்திய அணியின் தலைவர் மஹிந்திர சிங் டோனி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவுடனான ரெஸ்ட் போட்டியில் சங்ககார கலந்து கொண்டுள்ளமையால் அவரால் நேரில் சென்று விருதனை பெற்றுக்கொள்ள முடியாது போனமை குறிப்பிடத்தக்கது. 

 
  • உறவுகளின் வருகை

    Like
    You and 8,276 others like this. Add a comment8,276 people like this. Be the first of your friends.